வள்ளியூரில் அனுமன் ஜெயந்தி விழா

வள்ளியூர், டிச.30: வள்ளியூர் சுந்தரபரிபூரண பெருமாள் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1008 வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு காலையில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சுவாமிக்கு பஞ்ச திரவிய அபிஷேகம், மகாகணபதி ஹோமம் சகலகிரக நிவர்த்தி ஹோமம் உள்ளட்ட பல்வேறு ஹோமங்கள் நடந்தது.காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் ஆஞ்சநேயருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை, இரவில் சுவாமிக்கு வடை மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு நடந்தது. ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் ரிசிகேசவர், கண்ணன் மற்றும் கோயில் பக்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories: