தேன்கனிக்கோட்டை, டிச.29: தேன்கனிக்கோட்டை உண்டு உறைவிட பள்ளி மாணவர்கள் இளம் விஞ்ஞானிகள் விருது பெற்று சாதனை படைத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை சந்தைபேட்டை அருகே அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஏஆர்எஸ் திட்டத்தில் உண்டு உறைவிடப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் மலை கிராமங்களில் பள்ளி இடைநின்ற, வசதியற்ற ஏழை எளிய மாணவ, மாணவிகள் 100 பேர் தங்கி படித்து வருகின்றனர். இங்கு 8ம் வகுப்பு பயிலும் மலை கிராம மாணவர்கள் ஜீவா, ராஜசேகர், மஞ்சு, வனிதா ஆகியோர் மாவட்ட அளவில் நடைபெற்ற 27வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு இளம் விஞ்ஞானிகள் விருது பெற்றனர்.