குமுதேபள்ளி அருகே லாரி மீது வேன் மோதி 6 ஐயப்ப பக்தர்கள் காயம்

ஓசூர், டிச.27:  ஓசூர் குமுதேபள்ளி அருகே லாரி மீது வேன் மோதியதில் ஐயப்ப பக்தர்கள் 6 பேர் காயமடைந்தனர். ஓசூர் குமுதேபள்ளி அருகே, கர்நாடக மாநிலம் மாகடி பகுதியை சேர்ந்த 12 பேர், சபரிமலைக்கு வேனில் சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு, நேற்று அதிகாலை சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். குமுதேபள்ளி பக்கம் வந்த போது, முன்னால் சென்ற லாரி மீது, ஐயப்ப பக்தர்களின் வேன், எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் வந்த சிறுமி உள்பட 6 பேர்  பலத்த காயம் அடைந்தனர். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள், படுகாயமடைந்தவர்களை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலின் பேரில் வந்த ஓசூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்துக்குள்ளான வேனை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.

Related Stories: