நெல்லை, டிச. 22: பாளை சேவியர் கல்லூரியில் வருடாந்திர பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மரியதாஸ் தலைமை வகித்தார். நெல்லை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் மீனா மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அவர் பேசுகையில், இந்தியாவில் உயர்கல்வி படித்து பட்டம் பெறுபவர்கள் எண்ணிக்கை மேலும் உயரவேண்டும். அதிக எண்ணிக்கையிலானவர்கள் உயர்கல்வி படிப்பதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது.
இந்த கல்வி நிறுவனம் உங்களை பட்டதாரிகளாக மட்டும் உருவாக்கவிலலை. இந்த சமுதாய மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்த உங்களின் பங்களிப்பு அவசியம் என்பதையும் கற்றுத்தந்துள்ளது என்றார்.