சென்னை: ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையை ேசர்ந்தவர் வாசுதேவன் (63), தொழிலதிபர். இவருக்கு சென்னையில் பல்வேறு இடங்களில் ஓட்டல்கள் உள்ளன. இவரிடம், கடந்த 2 நாட்களுக்கு முன், திருநெல்வேலி மாவட்டம் வானூரை சேர்ந்த கார்த்திக் (27) என்பவர் கார் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில், வாசுதேவன் தனது காரில் வடபழனியில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்றார். கார்த்திக் காரை ஓட்டினார். வணிக வளாகத்தில் பொருட்கள் வாங்க சென்ற வாசுதேவன் திரும்பி வந்து பார்த்தபோது, காருடன் டிரைவர் கார்த்திக் மாயமானது தெரிந்தது.