×

செங்கம், புதுப்பாளையம் ஒன்றியத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் வேட்புமனு தாக்கல் செய்வதில் இடையூறு

செங்கம், டிச.13: செங்கம் மற்றும் புதுப்பாளையம் ஒன்றியத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் உள்ளாட்சி தேர்தலில் மனுதாக்கல் மற்றும் ஆவணங்கள் பெற முடியாமல் சுயேட்சை  மற்றும் அரசியல் கட்சியினர் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் செங்கம் ஒன்றியத்தில் உள்ள 44 கிராம ஊராட்சிகளில் 23 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட உள்ளனர். அதேபோல் கிராம ஊராட்சி சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட உள்ளனர். அதேபோல், புதுப்பாளையம் ஒன்றியத்தில் 15 ஒன்றிய கவுன்சிலர்கள், 37 கிராம ஊராட்சி தலைவர்கள் உட்பட கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கு போட்டியிட உள்ளனர்.

இந்நிலையில், சுயேட்சை மற்றும் அரசியல் கட்சியினர் மனு பெறவும், ஆவணங்கள் மற்றும் சான்றுகள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நிலையில், செங்கம் ஒன்றியத்திலும், புதுப்பாளையம் ஒன்றியத்திலும் காலநேரமின்றி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் மட்டுமின்றி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கபடுகின்றனர். எனவே அலுவலக நேரத்தில் மின் தடை ஏற்படாமல் இருக்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chengam ,New Delhi ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...