×

மீனாட்சிபுரத்தில் ஆக்ரமிப்பு கோயில் இடிப்பு

நாகர்கோவில், டிச.13:  நாகர்கோவில், மீனாட்சிபுரம் பகுதியில் ஆக்ரமிப்பு கோயில் இடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. நாகர்கோவில் மாநகர பகுதியில் ஆக்ரமிப்பு அகற்றும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அந்த வகையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக நாகர்கோவில், மீனாட்சிபுரம், தளவாய்தெரு பகுதியில் நேற்று காலை ஆக்ரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது. இந்தநிலையில் அந்த பகுதியில் உச்சி மாகாளி அம்மன் கோயில், ஆக்ரமிப்பு இடத்தில் கட்டப்பட்டு இருக்கிறது. அதனை உடனே அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை ஆணையர் சரவணகுமார் முன்னிலையில் நகரமைப்பு அலுவலர் விமலா, ஆய்வாளர் கெபின்ஜாய் மேற்பார்வையில் அந்த கோயில் கட்டிடம் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் இடித்து அகற்றப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Demolition ,
× RELATED NCERT பாடப்புத்தகங்களில், பாபர் மசூதி...