கிருஷ்ணகிரி, டிச.12: காவேரிப்பட்டணத்தில், ஜேஆர்சி மாணவர்களுக்கான உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் நடந்தது. காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட அளவில் ஜேஆர்சி மாணவர்களுக்கு 3 நாட்கள் உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், ஜேஆர்சி கொடியை ஏற்றி வைத்தும், ஹென்றி டுனான்ட் உருவப்படத்தை திறந்து வைத்தும், முகாமினை துவக்கி வைத்தார். இதில், கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி, பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி, ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம், சாரணர் இயக்க துணை செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கன்வீனர் பாலமுருகன் வரவேற்றார். நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி, மத்தூர் கல்வி மாவட்டங்களின் அரசு உயர்நிலை, மேல்நிலை, நடுநிலை, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும், 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பங்கேற்றனர்.