கிருஷ்ணகிரி, டிச.12: கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், நேற்று தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், பள்ளி, கல்லூரி மற்றும் அரசு பணியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இந்நிலையில், நடைபயிற்சி மேற்கொள்ளும் பகுதியிலும், கழிவறை உள்ளிட்ட இடங்களிலும் அசுத்தமாக உள்ளதால் கொசுகள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இது குறித்து இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் டாக்டர் தனசேகரன், மாவட்ட நலப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர் கோவிந்தனிடம் புகார் தெரிவித்தார்.