நீடாமங்கலம்,டிச.3: அமைதி பேச்சுவார்த்தையில உடன் ஏற்பட்டதையடுத்து ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டுபோடும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.நீடாமங்கலம் அருகில் உள்ள பொதக்குடியில் தமுமுக,மமக சார்பில் ஆலோசனை கூட்டம் கடந்த 29ம் தேதி தலைவர் சாகுல்அமீது தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொதக்குடி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தராத நிர்வாகத்தை கண்டித்து இன்று (3ம் தேதி) ஊராட்சி அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனையறிந்த கூத்தாநல்லூர் தாசில்தார் மலர்கொடி தலைமையிலும்,நீடாமங்கலம் வட்டாரவளர்ச்சி அலுவலர் (கி.ஊ) உஷாராணி, மற்றும் போலீசார் முன்னிலையில் கூத்தாநல்லூரில் சமாதானகூட்டம் நடந்தது.