லாட்டரி வாங்க மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

ஈரோடு,  டிச. 1: ஈரோடு வீரப்பன் சத்திரம் விவேகானந்தர் ரோட்டை சேர்ந்தவர் பீா்  முகமது (39). இவர் ஈரோடு ஈபிபி நகரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது,  அதே பகுதியை சேர்ந்த பிரகாசம் (36) என்பவர் லாட்டரி சீட்டு வாங்க கோரி  கட்டாயப்படுத்தி, மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து பீர் முகமது ஈரோடு  வீரப்பன் சத்திரம் போலீசில் அளித்த புகாரின் பேரில்,  பிரகாசத்தை போலீசார் கைது செய்தனர். ஈரோடு வெட்டுக்காட்டு வலசு  சைவமாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த மாரியப்பன் (30) என்பவர் அளித்த  புகாரின் பேரில், பூசாரி தோட்டத்தை சேர்ந்த ஞானம் (51) என்பவரை போலீசார் கைது  செய்தனர். இதேபோல், கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த ரவி (60) என்பவர்  அளித்த புகாரின் பேரில், காவேரி ரோட்டை சேர்ந்த மலைச்சாமி (58) என்பவரை  போலீசார் கைது செய்தனர்.

Related Stories: