போச்சம்பள்ளி, நவ.27: காவேரிப்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் துவங்கியுள்ளது. இதனால் ஒரு லோடு வைக்கோல், ₹5 ஆயிரத்துக்கு விற்கப்படுவதால், போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். போச்சம்பள்ளி, மத்தூர் பகுதிகளில், கடந்தாண்டு வறட்சி காரணமாக கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகள் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று, ஒரு லாரி லோடு வைக்கோலை ₹12 ஆயிரம் முதல், ₹15 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்கி வந்தனர். இந்த நிலையில், நடப்பாண்டு தென்பெண்ணை ஆற்று நீர் மூலம் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் நெல் நெல் சாகுபடி செய்துள்ளனர்.