சுரண்டை, நவ. 20: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரசார், நாளை முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என நெல்லை மேற்கு மாவட்ட காங். தலைவர் பழனிநாடார் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை(21ம் தேதி) முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். நகராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் ரூ.5 ஆயிரம், வார்டு உறுப்பினர் ரூ.2 ஆயிரம், பேரூராட்சி தலைவர் ரூ.3 ஆயிரம், பேரூராட்சி உறுப்பினர் ஆயிரம் ரூபாய், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ரூ.3 ஆயிரம், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ரூ.2 ஆயிரம் என கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.