பல்லாவரம்: ₹10 ஆயிரம் பணம் வாங்க வந்த வயதான தம்பதியை அடித்து கொலை மிரட்டல் விடுத்த அதிமுக பிரமுகர் மகன் மீது பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்லாவரம் ரங்கநாத முதலி தெருவை சேர்ந்தவர் அமுதவல்லி சிங்காரம். இவர் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.அந்த புகாரில் கூறியிருப்பதாவது: எனது கணவர் சிங்காரம், தனது தம்பி இளங்கோவன் கடையில் இருக்கும் சாமியார் ஒருவர் ₹10 ஆயிரம் பணம் தர வேண்டும். இந்த பணத்தை வாங்க எனது கணவர் சென்றபோது, எனது கணவரின் தம்பி இளங்கோவன் தகாத வார்த்தைகளில் பேசினார்.