கிருஷ்ணகிரி, நவ.13: கிருஷ்ணகிரியில், பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கிருஷ்ணகிரியில் நேற்று பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் சுப.குமார் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஆறுமுகம், மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட மத்திய மாவட்ட செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். இதில் பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசியதாவது: வரும் உள்ளாட்சி தேர்தலில், அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது. உள்ளாட்சியில் போட்டியிட கூடுதலான இடங்களையும், உரிமைகளை கேட்டு பெறுவோம். பாமக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களில், பாமகவினர் கட்டுப்பாட்டுடன் பணியாற்ற வேண்டும்.