திருவேங்கடத்தில் ஆயுர்வேத மருத்துவ முகாம்

திருவேங்கடம், நவ. 13: திருவேங்கடம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடந்தது.  பேரூராட்சி முன்னாள் தலைவர் சீனிவாசன், முகாமை துவக்கி வைத்தார். இடுப்புவலி, மூட்டுவலி, கழுத்துவலி, நரம்பு சுருட்டு(வெரிகோஸ்), கல்லடைப்பு, பித்தவெடிப்பு, வாதநீர், முடக்குவாதம் உட்பட மற்றும் பல பிரச்னைகளுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் தொடக்க நிலை மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. முகாமில் திருவேங்கடம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இலவச சிகிச்சை பெற்று பயனடைந்தனர். ஏற்பாடுகளை ராஜபாளையம் கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலை மற்றும் அல் ஷிபா ஆயூஷ் மருத்துவமனை இணைந்து செய்திருந்தனர்.

Related Stories: