சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாண்டிபஜாரில் பொதுமக்கள் வசதிக்காக 39.36 கோடி செலவில் நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையின் இருபுறங்களிலும் எல்இடி பல்புகள் உள்ள அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சாலையில் உள்ள அனைத்து சுவர்களிலும் அழகுப்படுத்தும் வகைகளில் பல்வேறு வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் நடைபாதையில் அமரும் வகையில் இருக்கைகள் (ஸ்ட்ரீட் பர்னிச்சர்) அமைக்கப்பட்டது. சாலையில் உள்ள மரங்களை சுற்றி பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வளாகத்தை சுற்றியுள்ள 14 சாலைகள் ₹19.11 ேகாடி செலவில் ஸ்மார்ட் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன.