ஆலந்தூர்: மடிப்பாக்கத்தில் தனியார் கல்லூரி ஊழியர் வீட்டில் 18 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, சுப்பிரமணி தெருவை சேர்ந்தவர் முகமது ஆரிப் (61). வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், கடந்த 9ம் தேதி மாலை தனது வீட்டை பூட்டிவிட்டு காலணிகளை வைக்கும் இடத்தில் சாவியை மறைத்து வைத்துவிட்டு குடும்பத்துடன் ராயப்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.