சென்னை: மயிலாப்பூர் விஎஸ்வி கோயில் தெருவை சேர்ந்தவர் பலராமன் (75). இவரது மனைவி சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் இறந்த மனைவியின் சடங்கு நிகழ்ச்சி கடந்த 22ம் ேததி நடந்தது. அப்போது புகைப்படத்தில் இறந்தவர் பயன்படுத்திய 9 சவரன் தாலி செயின் மாட்டி வைக்கப்பட்டிருந்தது. சடங்கு முடிந்து பார்த்தபோது 9 சவரன் செயின் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பலராமன் சடங்கிற்கு வந்த உறவினர்களிடம் கேட்டார். ஆனால் யாரும் “நாங்கள் எடுக்கவில்லை” என்று கூறினர். ஆனால் ஒரு பெண் மட்டும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த பலராமன், அவர் மீது மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார், பலராமனின் உறவினரான அடையார் இந்திராநகரை சேர்ந்த மீனா (28) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் சடங்கு நேரத்தில் 9 சவரன் தாலி செயினை கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடியதை ஒப்புக்கொண்டார். அதைதொடர்ந்து போலீசார் நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து தாலி செயினும் பறிமுதல் செய்யப்பட்டது.