தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை ஜே.ஜே நகரை சேர்ந்த தினேஷ்குமார் (16), ஆர்.கே.நகர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு சிவில் இன்ஜினியரிங் படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் தேர்வு எழுதிவிட்டு சக நண்பர்களுடன் காசிமேடு மீன்பிடி துறைமுகம் கடலில் குளித்தார். அப்போது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி தினேஷ்குமார் மாயமானார். தகவலறிந்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, கடலில் மாயமான மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், கிடைக்கவில்லை.