சேலம், நவ.8: பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் கைதான ஆட்டோ டிரைவரின் மனைவி போலீஸ் கமிஷனர் அலுவலதத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். சேலம் இளம்பிள்ளையை சேர்ந்தவர் மோகன்ராஜ்(45). ஆட்டோ டிரைவர். இவர் ஏழை பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து அதனை வீடியோவில் பதிவு செய்து தொடர்ந்து மிரட்டி வந்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். அவரது நண்பர் மணிகண்டனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். ஆட்டோ டிரைவர் மோகன்ராஜை போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அப்போது அவர் தான் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.