பெரம்பூர்: பெரம்பூரில் மர்ம காயச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.பெரம்பூர், ரமணா நகர், ஜவகர் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (எ) ஜோஸ்வா. அதே பகுதியில் சொந்தமாக ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கிரேசி. தம்பதிக்கு, மூன்று பெண் குழந்தைகள். இதில், 2வது மகள் ஜெனோபா லில்லி (8), பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தாள்.கடந்த 4 நாட்களாக ஜெனோபா லில்லிக்கு காய்ச்சல் இருந்துள்ளது. இதனால், பெரம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதித்து, 2 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை சிறுமிக்கு காய்ச்சல் அதிகமானதால், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.