நெல்லை, நவ. 7: கடையநல்லூர் தாலுகா கொடிக்குறிச்சி ஊராட்சி சிவராமப்பேட்டை ஊர் பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனு: எங்கள் ஊரில் பஞ்சாயத்துக்கு சொந்தமான ஊர் பொதுக்கிணற்றை மூடி கட்டிடம் கட்டப்பட்டதை அகற்ற கோரி 6 முறை மனு கொடுத்தோம். அந்த மனுவிற்கு தாங்கள் அளித்துள்ள பதிலில், ‘ஊர் பொதுக்கிணற்றை மூடி கட்டிடம் கட்டப்பட்டதை உடனே அகற்றும் படி கடையநல்லூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை அகற்றவில்லை.