களக்காடு, நவ. 7: களக்காடு அருகே உள்ள தம்பிதோப்பு இந்திரா காலனியைச் சேர்ந்த வானுமாமலை மகன் சிதம்பரநாதன் (45). கூலி தொழிலாளியான இவர், கடந்த 4ம் தேதி இரவு களக்காடு - சேரன்மகாதேவி சாலையில் அம்பேத்கர் சிலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கும், களக்காடு பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் பிரேம் லால் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கம்பால் தொழிலாளி சிதம்பரநாதனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதைப்பார்த்த பொதுமக்கள் சிலர் ஓடிச்சென்று சப்-இன்ஸ்பெக்டரை பிடித்து அவர் தாக்குவதை தடுத்தனர். காயமடைந்த சிதம்பரநாதன், நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.