தேன்கனிக்கோட்டை, நவ.7: தேன்கனிக்கோட்டை அருகே இந்து கடவுள் படங்களை எரித்த பாதிரியாரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தேன்கனிக்கோட்டை அருகே எஸ்.குருபட்டி கிராமத்தைச் சேரந்த விவசாயி முத்துராஜ்(32). கடந்த ஆண்டு கிறிஸ்தவராக மதம் மாறிய இவர், கிராமத்தில் உள்ள தேவாலயத்திற்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், தனது வீட்டில் இருந்த இந்து கடவுள் படங்களை, பாதிரியார் ஜான்பிரிட்டோவிடம் முத்துராஜ் கொடுத்ததாக கூறப்படுகின்றது. அதை கடந்த இருதினங்களுக்கு முன், பாதிரியார் தீயிட்டு எரித்துள்ளார்.