கிருஷ்ணகிரி, நவ.7: கிருஷ்ணகிரி வட்டாரத்தில் பிரதமரின் கவுரவ நிதி வழங்கும் திட்டத்தில் விடுபட்ட விவசாயிகளை சேர்க்கும் சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது. இது குறித்து கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி வட்டாரத்தில் பிரதமரின் கவுரவ நிதி வழங்கும் திட்டத்தில் விடுபட்ட விவசாயிகளை சேர்க்கும் சிறப்பு முகாம், கடந்த 4 மற்றும் 5ம் தேதிகளில் நாரலப்பள்ளி மற்றும் கோதிகுட்லப்பள்ளி கிராமங்களிலும், நேற்று (6ம் தேதி) ஜிஞ்சுப்பள்ளி கிராமத்திலும் நடந்தது. இன்று (7ம் தேதி) இட்டிக்கல் அகரம் கிராமத்திலும், நாளை (8ம் தேதி) பெத்ததாளப்பள்ளி, சோக்காடி ஆகிய கிராமங்களிலும் நடைபெறவுள்ளது.