திங்கள்சந்தை, நவ.5: குமரி மாவட்ட சிஎஸ்ஐ பேராலயத்தில் களியங்காடு, நாகர்கோவில், சாந்தபுரம், புத்தளம், தாமரைகுளம், கொட்டாரம் உள்பட மொத்தம் 41 சேகரங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் வாரம் அகில உலக திருமுறைப் பள்ளி தினவிழா கொண்டாப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான அகில உலக திருமுறைப்பள்ளி தினவிழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.அடையாளமாகும் அரும்புகள் என்ற கருப்பொளுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. 41 சேகரங்களிலும் வெகு விமரிசையாக நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் அந்தந்த சபையை சேர்ந்த போதகர்கள் தலைமையில், ஆலய நிர்வாகிகள், ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் உள்பட சபை அங்கத்தினர் பங்கேற்றனர். பவனியில் பங்கேற்றவர்கள் கிறிஸ்தவ பாடல்களை பாடியபடி சென்றனர்.