சென்னை: சிறையில் உள்ள பெண் கஞ்சா வியாபாரியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு 11 கிலோ கஞ்சாவை வீட்டில் பதுக்கிய திருநங்கையை போலீசார் கைது செய்தனர். சென்னை அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் குணா (எ) சித்ரா (30). திருநங்கையான இவர், வியாசர்பாடி சத்யா நகரில் உள்ள கஞ்சா வியாபாரி அமுலுவுடன் தொடர்பு வைத்துக்கொண்டு கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த மாதம் அமுலுவை போதை தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அப்போது அமுலு பதுக்கி வைத்திருந்த 11 கிலோ கஞ்சாவை பத்திரமாக வைத்திருக்கும்படி குணாவிடம் கொடுத்து சென்றுள்ளார்.