மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு விருது

கிருஷ்ணகிரி, அக்.24: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்.  இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு 2019ம் ஆண்டிற்கான விருதுகள் மாநில அளவில் வழங்கப்படவுள்ளது. அதன்படி, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பணிபுரிந்தவருக்கான சிறந்த பணியாளர் / சுயதொழில் புரிபவர், பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோர், செவித்திறன் குறைபாடுடையோர், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி மற்றும் கல்வி போதித்த சிறந்த ஆசிரியர், சமூக பணியாளர், சிறந்த முறையில் பயிற்சி அளித்த நிறுவனம். மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய நிறுவனம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகிறது. எனவே, இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: