ஓசூர் வட்டாரத்தில் திட்டப்பணிகள் ஆய்வு

ஓசூர், அக்.24: ஓசூர் வட்டாரத்தில் நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நந்திமங்கலம், நல்லூர் மற்றும் நாகொண்டப்பள்ளியில் திட்டப்பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.ஓசூர் வேளாண்மை உதவி இயக்குநர் மனோகரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் காளகஸ்திபுரம் கிராமத்தில் தேக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு, நடவு செய்யப்பட்டது. பௌத்தூர் கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலகத்தில் பிரதமரின் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான ₹6 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பிழைத்திருத்தம் செய்யும் பணி ஆய்வு செய்யப்பட்டது. மேலும், தேசிய பயறு வகை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நீர் கடத்தும் குழாய் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை துணை வேளாண்மை அலுவலர் முருகேசன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் செய்திருந்தனர்.

Related Stories: