ராஜபாளையம், அக். 23: ராஜபாளையத்தில் போலீசார் அடாவடியாக அபராதம் விதிப்பதாக கூறி, வாகன ஓட்டுனர்கள் நேற்று பேரணி செல்ல முயன்றனர். அவர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.ராஜபாளையத்தில் போலீசார் வாகன ஓட்டுனர்களுக்கு அடாவடியாக அபராதம் விதிப்பதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்தும் ராஜபாளையத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தங்களது வாகனங்களை ஒப்படைக்க ஜவஹர் மைதானத்திலிருந்து பேரணியாக செல்ல வாடகை வாகன உரிமையாளர்கள், ஒர்க்ஷாப் உரிமையாளர்கள் மற்றும் டூவீலர் ஓட்டுனர்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தனர். இதன்படி நேற்று காலையில் ராஜபாளையம் ஜவஹர் மைதானத்திலிருந்து, வட்டார போக்குவரத்து அலுவகத்திற்கு வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்ட 500 பேர் பேரணியாக செல்ல முயன்றனர்.