தண்டையார்பேட்டை: நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (46). கடந்த மாதம் குற்ற வழக்கு ஒன்றில் போலீசார் இவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கடந்த 14ம் தேதி இவருக்கு கடும் தலைவலி ஏற்பட்டதால், போலீசார் இவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, டாக்டர்கள் பரிசோதனையில் இவரது மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் நரம்பியல் துறையில் அனுமதித்தனர். அங்கு, 5வது மாடியில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்தார்.