ஊத்தங்கரையில் கடைக்குள் புகுந்த உடும்பு மீட்பு

ஊத்தங்கரை, அக்.16:ஊத்தங்கரை செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் வினோத்(28). டைலரான இவர் நேற்று காலை வழக்கம் போல் கடையை திறந்து துணி தைத்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவரது கடைக்குள் உடும்பு ஒன்று நுழைந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த வினோத் கடையின் ஷட்டரை சாத்திவிட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் உடுப்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர. வனத்துறையினர் ஒன்னகரை காப்பு காட்டில் உடும்பை விடுவித்தனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: