அண்ணாநகர்: கொரட்டூர், சீனிவாசபுரம், 3வது தெருவை சேர்ந்தவர் சித்ரா. இவருக்கு, குடும்ப நண்பர் முருகன் மூலம், கலைபுனிதன் என்பவர் அறிமுகமானார். இவர், சித்ராவின் மருமகனுக்கு மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதற்காக ₹10 லட்சம் கேட்டுள்ளார். அதில், முதல் தவணையாக கடந்த 2017ம் ஆண்டு 8.37 லட்சத்தை சித்ரா கொடுத்துள்ளார். ஆனால், கலைபுனிதன் இதுவரை வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.