சென்னை: விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 21 வயதில் மகள் ஒருவர் உள்ளார். இவர் 4 ஆண்டுகளுக்கு முன், பிளஸ் 2 படிப்பை அண்ணாநகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படித்தார். அப்போது, அதே பள்ளியில் பயின்ற அண்ணாநகர் டி- செக்டார் 7வது தெருவை சேர்ந்த தொழிலதிபரின் மகன் இர்பான் (21) என்பவர், ஐஏஎஸ் அதிகாரியின் மகளுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் வீட்டிற்கு தெரியாமல் பல இடங்களில் சுற்றி வந்துள்ளனர். பள்ளி படிப்பு முடிந்தும் இவர்களது காதல் தொடர்ந்துள்ளது. இர்பான் தற்போது வண்டலூரில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர், ஐஏஎஸ் அதிகாரி மகளை திருமணம் செய்வதாக கூறி, பல இடங்களுக்கு அழைத்து சென்று நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஐஏஎஸ் அதிகாரியின் மகள் கேட்டபோது, ‘நான் நட்பாகத்தான் பழகினேன். உன்னை திருமணம் செய்துகொள்ள முடியாது,’ என்று இர்பான் கூறியுள்ளார்.