சென்னை: மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக 12 லட்சத்தை மோசடி செய்த நபரை, தனி அறையில் அடைத்து சித்ரவதை செய்த இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எழும்பூர் காவல் ஆணையர் சாலையை சேர்ந்தவர் ஜெயராஜ் (55). இவர், வேல்முருகன் என்பவருக்கு மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளார். மேலும், இந்த வேலைக்காக ₹12 லட்சத்தை வேல்முருகனிடம் ஜெயராஜ் வாங்கி உள்ளார். ஆனால், பல நாட்களாகியும் சொன்னபடி மின் வாரியத்தில் வேலை வாங்கி தரவில்லை. இதனால், வேலைக்காக கொடுத்த 12 லட்சத்தை வேல்முருகன் திரும்ப கேட்டுள்ளார். அதற்கு ஜெயராஜ், நான் ரவி என்பவரிடம் பணத்தை கொடுத்து விட்டேன், என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஜெயராஜ் செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், ‘நான் குமார் பேசுகிறேன்.