வேளச்சேரி, அக். 9: பள்ளிக்கரணையில் வசித்து வரும் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.பள்ளிக்கரணை பரசுராமன் தெருவை சேர்ந்தவர் முனீர் உசேன் (40). தனியார் நிறுவன அதிகாரி. இவர், கடந்த வாரம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு 2 நாள் கழித்து வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 40 சவரன் நகை கொள்ளைபோனது தெரியவந்தது.இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகரை சேர்ந்த சுரேஷ் என்கிற சுக்கு காபி (21), பெரும்பாக்கம், எழில் நகர், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த சீனிவாசன் (24), மகபுல் பாஷா என்கிற பப்லு (22) மற்றும் சிறுவன் ஆகியோர்தான் முனீர்உசேன் வீட்டில் கொள்ளையடித்தது தெரியவந்தது.