கோவிலூர் பெண்கள் பள்ளி என்எஸ்எஸ் முகாம் நிறைவு விழா

முத்துப்பேட்டை, அக்.2: முத்துப்பேட்டை கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் பள்ளி மாணவிகள் கடந்த ஒரு வாரமாக பல்வேறு தூய்மை பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டனர்.

நேற்று நிறைவு விழா கீழநம்மங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை தாமரைச்செல்வி தலைமை வகித்தார். முன்னதாக என்எஸ்எஸ் அலுவலர் அனிதா வரவேற்றார். இதில் தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவிகளுக்கு சான்றிதழ் பரிசுகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவிகள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து பேசினர். மேலும் நிறைவு முகாமை முன்னிட்டு அப்பகுதி தூய்மைபடுத்தப்பட்டது. துணை திட்ட அலுவலர் ராதிகா நன்றி கூறினார்.

Related Stories: