இடைப்பாடியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

இடைப்பாடி, அக்.1: இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது. முகாமில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கதிரேசன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் நிர்மலா வரவேற்றார். அதிமுக செயலாளர் முருகன், கூட்டுறவு அச்சக மாவட்ட தலைவர் கந்தசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் நாராயணன், உத்திரராஜ், துணை தலைமை ஆசிரியர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், ஊரக சுகாதாரம், பெண் சிசுக்கொலை தடுப்பு, சாலை மேம்பாடு, கிராம மேம்பாடு, பள்ளி தூய்மை, பிளாஸ்டிக் பைகளை அகற்றுதல், மரக்கன்று நடுதல், மழைநீர் சேகரிப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உள்ளிட்ட பணிகளை மாணவர்கள் மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய மாணவர்களுக்கு நேற்று பரிசளிக்கப்பட்டது. என்எஸ்எஸ் திட்ட அலுவலர் மாரிமுத்து நன்றி கூறினார்.

Related Stories: