சூளகிரி, அக்.1: சூளகிரி அருகே உத்தனப்பள்ளி பகுதியில், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், பிடிஓ ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் கடை கடையாக சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் கடைகளில், பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக, கலெக்டருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கண்காணித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதன்பேரில், உத்தனப்பள்ளி பகுதியில் உள்ள பேக்கரி கடைகள், டீ கடைகள் மற்றும் பலகார கடைகள், ஓட்டல் கடைகளில் அதிரடி சோதனை நடைபெற்றது.