பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் மாநில அளவிலான கணினி கருத்தரங்கு

வி.கே.புரம், அக்.1: பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நடந்த மாநில அளவிலான கணினி கருத்தரங்கில் சதக் அப்பா கல்லூரி ஒட்டு  மொத்த சாம்பியன் ஷிப்பை தட்டிச் சென்றது.பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் மாநில அளவிலான கணினி கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சுந்தரம் தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி நடராஜன் முன்னிலை வகித்தார். கணினி துறை தலைவர் சண்முகசுந்தரம் வரவேற்றார். நல்லமணி யாதவ கல்லூரி குழும தலைவர் மணிமாறன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.19 கல்லூரிகளைச் சார்ந்த 250 மாணவர்கள் கலந்து கொண்டனர். பேப்பர் பிரசன்டேஷன், லோகோ கிரியேஷன், மென்பொருள் கிரியேஷன், குவிஸ், ஆஸ் யு  லைக் உள்ளிட்ட 5 போட்டிகள் நடந்தன. இதில் சதக் அப்பாகல்லூரி ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப்பை பெற்றது.

இதில் கல்லூரி பிஆர்ஒ பேராசிரியர் கார்த்திகேயன், தமிழ்த்துறை தலைவர் சிவசங்கர், வணிகவியல் துறை தலைவர் வள்ளியம்மாள், இந்து கல்லூரி கணினி பேராசிரியர் ஹரிஹர சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கணினி அறிவியல்துறை பேராசிரியர்கள் வசந்த டயனா, மாயாண்டி, ராமலெட்சுமி, சுகந்தி மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

Related Stories: