சிவகாசி. செப். 26: சிவகாசி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் பஸ் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவர்களுக்கு, கண்மாயில் ‘போர்வெல்’ அமைக்கப்பட்டு மேல்நிலை குடிநீர் தொட்டி மூலமாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வராமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி அலுவலகம் அருகே சுக்ரார்பட்டி- சிவகாசி சாலையில் திடீரென பஸ் மறியலில் ஈடுபட முயன்றனர்.