அருப்புக்கோட்டை, செப். 26: அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி குமரன் நகரைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி சாந்தி (45). முத்துராஜ் துபாயில் வேலை பார்த்து வருகிறார். சாந்தி நேற்று முன்தினம் மதியம் வீட்டை பூட்டிவிட்டு வங்கிக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 14 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து பந்தல்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.