கிருஷ்ணகிரி, செப்.25: தேன்கனிக்கோட்டை அருகே கோழிப்பண்ணை அமைக்க அனுமதி வழங்க கூடாது என தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர். கெலமங்கலம் ஒன்றிய தமிழக விவசாயிகள் சங்க தலைவர் மணி தலைமையில் விவசாயிகள் கலெக்டர் பிரபாகரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தேன்கனிக்கோட்டை பேரூராட்சி வார்டு எண் 17க்கு உட்பட்ட கவிநரசிம்மர் சாமி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள விவசாய நிலத்தில், கர்நாடகா மாநிலம் ஒங்கசந்திராவை சேர்ந்த நபர் ஒருவர் கோழிப்பண்ணை அமைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறார். அப்பகுதியில் கோழிப்பண்ணை அமைத்தால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் துர்நாற்றத்தால் பாதிக்கப்படுவர்.