தென்காசி, செப். 24: சுழல்நிதி மற்றும் மானியம் பெற்று தருவதாக கமிஷன் பெற்றுக் கொண்டு மிரட்டும் கூட்டுறவு ஊழியர் உள்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோட்டாட்சியரிடம் சுய உதவிக்குழுவினர் மனு அளித்தனர். தென்காசி, வேதம்புதூர், அய்யாபுரம், கொட்டாகுளம், புல்லுக்காட்டுவலசை, வல்லம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் 10க்கும் மேற்பட்டோர் தென்காசி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அருணாசலத்திடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: