ஏர்வாடி, செப். 19: ஏர்வாடி சிறுமளஞ்சி பகுதியில் நேற்று முன்தினம் நெல் அறுவடை பணி நடந்தது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாலூர் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் விஜி(26) என்பவர் நெல் அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை பணியில் ஈடுபட்டு வந்தார். வேலை முடிந்து இரவில், வழக்கம்போல் இயந்திரத்தின் மேல் பகுதியில் டிரைவர் விஜி தூங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்து பலியானார்.