சங்கரன்கோவில், செப். 19: குருவிகுளத்தில் அண்ணாவின் 111வது பிறந்த நாள் விழா அதிமுக பொதுக்கூட்டம், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் நடந்தது. குருவிகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் சுப்பையா பாண்டியன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கண்ணன், சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் ரமேஷ், நகர செயலாளர் ஆறுமுகம், மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் வேல்முருகன், குருவிகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், திருவேங்கடம் நகர செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் மோகன் வரவேற்றார். மகளிரணி துணை செயலாளரும், அமைச்சருமான ராஜலட்சுமி கலந்து கொண்டு ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: எடப்பாடி தலைமையிலான ஆட்சியில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. மக்கள் நலத்திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. அண்ணாவின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு அதிமுகவுக்கு மட்டுமே தகுதி உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.