×

பால் விலை உயர்வை திரும்பப்பெற கோரி புரட்சிகர மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், செப்.17 :  தமிழகத்தில் மூடிக்கிடக்கின்ற தொழிற்சாலைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். விவசாயிகளுக்கு மானியம் வழங்கி உற்பத்தியை பெருக்கிட வேண்டும். பால் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெயன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் மார்ட்டின், அலெக்ஸாண்டர், குமார், பால்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Marxist ,demonstration ,return ,
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...