×

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான தாலுகா அலுவலக ஊழியர் உள்பட 2 பேர் கைது

தக்கலை, செப்.17: கிள்ளியூரை சேர்ந்தவர் தங்கபாய்(53). இவர் குழித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனது கணவர் செல்லத்தங்கம் உள்ளிட்டோர் மீது தனிநபர் வழக்கு தொடுத்திருந்தார். ஆனால் செல்லத்தங்கம் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் நீதிபதி அவருக்கு பிடியாணை பிறப்பித்தார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு தக்கலை போலீசார் ெசல்லத்தங்கத்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட செல்லத்தங்கம் கல்குளம் தாலுகா அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல் இரணியலை அடுத்த மேல்பாலை பகுதியை சேர்ந்தவர் குமாரதாஸ். இவர் மீதான அடிதடி வழக்கு பத்மனாபபுரம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் அவர் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை கைது செய்ய நீதிபதி பிடியாணை பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தக்கலை போலீசார் குமாரதாஸை அதிரடியாக கைது செய்தனர்.

Tags : persons ,office ,Taluk ,court ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...