தேன்கனிக்கோட்டை அருகே ரேஷன் பொருட்கள் வழங்காததால்

பொதுமக்கள் சாலை மறியல்தேன்கனிக்கோட்டை, செப்.15: தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளயில் ரேசன் பொருட்கள் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் சரியாக வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை ரேஷன் பொருட்கள் வழங்காததை கண்டித்து நேற்று 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரேஷன் கடை முன்பு திரண்டனர். தொடர்ந்து, அங்கு திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தேன்கனிக்கோட்டை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுத்தனர். இதனால், அந்தேவனப்பள்ளியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: